துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒளிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த சொற்களைப் பிரசவிக்கலானான்… பின் ஓர் இரவில்… துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப் படிந்து அவன் குரலுருவிப் பின் ஒரு பறவையைப்போல விரைந்து மறைந்ததாய்…..
அருமை தம்பி அகிலன்
விளக்கை மேயும்
பூச்சி…. விட்டில். ok.
வேட்டைக்குத்
தயாராகிறது பல்லி. m
பல்லியும் பூச்சியை சாப்பிடும். ஓகே. 2 ஆல் புச்சிக்கு மரணம்.
சரி அதென்னது பூனையின்
நிழற்கரங்கள்
தன்மீது படிவதை
அறியாது….
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
ஆனால் மறைவில் இன்னொரு படிமம். நாமாக மனத்திடை படம் போடலாமோ.!
எலி ஒன்றை பூனை பிடிக்க முற்படுவதை நிழல் ஓவியமாய்.
ம்.. நன்றாக இருக்கு கவிதை.
அழகிய ஓவியம் மனத்திடை.
நன்றி விக்கி அண்ணா மற்றும் நளாயினி அக்கா இருவருக்கும்.
நளாயினி said…
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
சாப்பிடும் என்றுதான் நினைக்கிறேன்
உங்களின் அத்தனை கவிதையும் அருமை. அழகிய கவிதை மொழி. இவற்றை ஒரு புத்தகமாக்குங்களன். காலம் போனால் கவிதையின் வீச்சம் குறைந்து போகும்.
மறுபடியும் நன்றி நளாயினி அக்கா