பூக்கள் சிதறிய வனத்தின்விழிகள் எங்கும்புழுக்களின் ஆக்கிரமிப்பு வாசம் இழந்துவாழ்வழியும் நிலையில்பூக்கள். அவற்றில்மலர்ச்சி மறைந்துவேதனை வடுக்கள்விழிகளில் வழிந்தது. இதழ்களில் எங்கும்துழைகளின் நிழல்கள்அந்நிழல்களின்இருளில் அமிழ்ந்து போயிற்றுபூக்களின் வாழ்தல் பற்றிய நினைப்பு பூக்கள் இப்போதுபுழுக்களைத்தின்றனதம்இயல்பு துறந்து. த.அகிலன்
Month: July 2006
முழுவதும் உனக்கே..
என் காதலே! இந்தப் பூமிப்பந்தின்எல்லா நுனியிலும்நீதான்நிறைந்து கிடைக்கிறாய்….. என் வார்த்தைகள்திணறும். உனைவிபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்என் கவிதை…. உதிரமுடியாத ப+க்களை எப்படித்தான்கைவசம் வைத்திருக்கிறாய்மாறாச் சிலிர்புடன்காதலின் தெருக்கள் எங்கும்விரவிக்கிடக்கிறது பூக்கள். குடித்துத் தீர்ந்தபின்பும்திகட்டித் திகட்டிமிஞ்சிக்கிடக்கிற அன்பின் பானமாய்நிறைந்து வழிகிறாய்.. என்வாழ்வின் ஒவ்வொருதுளியிலும்உனக்குத்தான்பாதிசீச்சிமுழுவதுமே உனது த.அகிலன்
இறைவனுக்கு ஒரு சாபம்…
சே!என் அதிகாலைக்கனவுகளில்தேவதைநுழைகிற நேரமாய்ப் பார்த்துகாதுகளில் நுழைந்துதொலைக்கிறதுகாண்டாமணியோசைஇறைவாநான்உன்னை சபிக்கிறேன்…. த.அகிலன்