நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது…– த.அகிலன் எங்களுடையபுன்னகையை சந்தேகிக்கும்எல்லோருக்கும் சொல்கிறோம்……. எங்கள் கடல்அழகாயிருந்ததுஎங்கள் நதியிடம்சங்கீதமிருந்ததுஎங்கள் பறவைகளிடம் கூடவிடுதலையின் பாடல்இருந்தது…..எங்கள் நிலத்தில்தான்எங்கள் வேர்கள் இருந்தன…நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்எம்மூரில்… அவர்கள்எங்கள் கடலைத்தின்றார்கள்…அவர்கள்தான்எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…அவர்கள்தான்எங்கள் பறவைகளை…
Month: June 2006
காலடிகளைத்தின்கிற காற்று…
நீ என்னிடம் தந்துபோனசிலமுத்தங்களும்புன்னகைகளும்மட்டும் எனக்குப்போதுமானதென்றுஉனக்கு யார் சொன்னது…? என் ஆயுளைத் தின்கிறஉன்நினைவுகளின் காலடிஓசையற்று நகர்கிறதுதொலைவிற்கு… உனக்கான கடிதங்கள்எழுதப்படாமலேயேஎனக்குள் இறந்தனகவிதைகளும்… நீளும் தொலைவுகளைநெருக்கத் திராணியற்றுநெளியும் என் வாழ்வு.. இப்போதுஉன் காலடிகளையும்தொலைவிற்குசெலுத்துகிறது காற்று மழையைப்போலநிரந்தரமற்றிருக்கும்நமது பிரிவுஅதைப்போலவேஅழுத்தமானதும்கவனிக்கச்செய்வதும் கூட த.அகிலன்
சிந்திப்பது குறித்து……..
நான்சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்எதைப்பற்றியும்..அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது. அது எப்போதும் மகிழ்ச்சியின்எதிரியாயும்துயரத்தின் தொடர்ச்சியாயுமே நீள்கிறது. எல்லோருடையபுன்னகைகளின் பின்hனால் உள்ளவேட்டைப்பற்கள் குறித்தும்ஒளிரும் ஓவ்வொரு வார்த்தைகளினதும்குரூரநிறத்தையும்சிந்தனைதான்எனக்குச் சொலலித்தருகிறது.. புன்னகைகளைவெறுமனே புன்னகைகளாயும்வார்த்தைகளை வெறுமனே வார்த்தைகளாயும்மனிதர்களின்கண்களின் பின்னால் உள்ளஇருள் நிறைந்த காடுகளை பசும் வயல்களெனவும்நான் நம்பவேண்டுமெனில்நிச்சயமாக நான்சிந்திப்பதை நிறுத்தியேயாகவேண்டும் த.அகிலன்