மலர்களின் மெளனம் உன்னைப்போல் அழகானது ஆனால் உனது மெளனங்களோ முட்களைப்போல…….. த.அகிலன்
Month: June 2006
பள்ளிக்கூடக் கனவு
எனது வெள்ளைச் சட்டையில்இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியதுநாற்றம் மூக்கைக் குமட்டிற்றுஎனது பள்ளியோகூரை கொட்டிப்போய்கரும்பலகை நிறமிழந்துவெண்கட்டி சிவந்து கசிந்துகதிரையோவெறும் பலகைத்துண்டங்களாய்சுவர்களில்சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது நசிந்து போனது வாழ்வுஎன் பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும்சாவின் அலறல்களுக்கிடையில்அடையாளமற்றனவாய்… த.அகிலன்
அடுத்து வரும் கணம்……
என்னுடைய காலடிச்சுவடுகள்கண்காணிக்கப் படுபவைபுன்னகைகள் விசாரணைக்கானவைஉயிர் குலையும்ஓர் ஊரின்பெரும்பயணி நான் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும் துயரங்களும்நிரம்பிக் கிடக்கிறதுவழிமுழுதும் துயரெழுதும் கவிதைவழிமுழுதும்வருகிறது துணைக்குதொலைவிலெழும் வேட்டோசைக்குச்செத்துப்போகிறான்என்சகபயணி துப்பாக்கிகளிற்குக்கால்கள் முளைத்த இரவில்அவை வெறிகொண்டெழுந்தன ஒரு கலையாடியின் கோபம்போலஇரவு முழுதும் பெய்த மழையில்கரைந்து போயிருந்ததுபலியாடுகளின் இரத்தம் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும்துயரங்களும்நிரம்பிக்கிடக்கிறதுவழிமுழுதும் த.அகிலன்