நிபந்தனைகளுக்குள்இருக்கிறது உலகம்… ஒன்றிற்காய்இன்னொன்றுஅதற்காய் மற்றொன்று இப்படியே வாழ்வின் ஒவ்வோர் அசைவும்நிரம்பியிருக்கிறதுநிபந்தனைகளுள்.. நம்பிக்கையின்கடைசிப்புன்னகையும்சலனமற்றிருக்கிறது. காலம்திணைகள்எதுவுமற்றமழலையின் மொழியெனநகரும் வாழ்க்கை நினைவுகளின் நீட்சியில்என் நெஞ்சுறுத்திக்கிடக்கிறதுமுட்கள் திரையிடப்பட்டிருக்கிறதுஒவ்வோர்புன்னகையும்பணிதலும் கூட மின்மினிகளுமற்றஇந்த இரவின்துணைவன்யார்? இன்னும்யாரிடமாவது மிச்சமிருக்கிறதாவெளிச்சம்.
Category: கவிதைகள்
காயங்கள்
வெற்றுக்கண்களுக்குச் சிக்கிவிடாமல்;காயங்கள்நிறைகின்றனமேனியெங்கும்உணர முடிகிறது என்னால்….. ஒரு புன்னகைஒரு முத்தம்அல்லதுஒரே ஒரு பார்வையின்பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்அவற்றை ஆற்றிவிட ஆனால்நண்பர்களேநிச்சயமாய்பலிகள் தேவையில்லை பூக்களின்செண்டுகளில் இருந்து கத்திகளை எடுங்கள்காயங்கள்இனியும் வேண்டாம்.. த.அகிலன்
ஒளியின் நடனம்..
காற்றிறல்நழுவவிட்ட உன்வார்த்தைகளை முட்களாய் மாற்றும் வித்தைஎங்கனம் சாத்தியமாகிறது என்எண்ணக்கூட்டிற்குள்குஞ்சு பொரித்துக்காத்திருக்கும்நிறையக்கேள்விகள். ஆனாலும்அன்பேஎனக்குள் நிகழ்கிறதுஒளியின் நடனம்என் கனவுகளிற்கு ஒளியூட்டியபடி…… நான் கைகளை குவித்துக்கொண்டுகாவலிருக்கிறேன்ஒளியின் நடனம்நின்றுபோகாதிருக்கஇப்போதுதீர்ந்து போயிருக்கிறதுஉள்ளிருந்தேயெழும் கவிதை ஆச்சரிமாய்எனக்கே புரியாதிருக்கிறஇக்கவிதையின் பாடுபொருள் எனினும் எனக்குள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறதுஇன்னும் தீராமல்ஒளியின் நடனம்.